விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்கின்றனகளும்*  கேட்கின்றனகளும் காணில்,*  இந் நாள்-
    பாண் குன்ற நாடர் பயில்கின்றன,*  இது எல்லாம் அறிந்தோம்- 
    மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்*
    சேண் குன்றம் சென்று,*  பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காண்கின்றனகளும் - காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும் - கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில் - ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண் - வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம் - இந்தமிக்க உபசாரமெல்லாம்

விளக்க உரை

தலைவன் பொருள்வயிற் பிரிதலைக் குறிப்பாலறிந்து தலைவி தோழிக்குக் கூறல் இது. தேசாந்தரஞ் சென்று பொருள் சம்பாதிப்பதற்காக நாயகியைப் பிரிந்து செல்லுதல் பொருள்வயிற் பிரிவாம். (பொருள்வயின் - பொருள் நிமித்தமான என்றபடி.) இங்கே ஒரு சங்கை பிறப்பதுண்டு; - எல்லாவற்றாலும் பரி பூரணனான ஒரு உத்தம புருஷனையே தலைவனாக நாட்டி நூலுரைப்பர் கவிகள்; அத்தலைவன் பொருள் சம்பாதிக்கும் பொருட்டு நாயகியைப் பிரிந்து தேசாந்தரம் செல்லப் பார்க்கிறானெனில், அவன் ஏழை என்று ஏற்படுமே; அவனவன் தலைவனாயிருக்கத்தக்கதே என்று சங்கிக்க இடமுண்டு. இதற்கு கேண்மின்; பொருளில்லாதவனாய்ப் பொருளீட்டுதற்காகப் பிரிகிறானென்பதில்லை; அப்பொருள் கொண்டு, துய்ப்பது ஆண்மைத் தன்மையன்று என்று கருதித் தனது ஸ்வயார்ஜிதமாய்ப் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியும் பிரிவு இது- என்றுணர்க. தேவகாரியமும் பித்ருகாரியமும் ஸ்வயார்ஜிகமான பொருள்கொண்டு செய்தாலன்றிப் பயன்படா; தாயப் பொருளாற் செய்யுமது தேவர்களையும் பித்ருக்களையும் இன்புறுத்தாதாம். ஆதலால் அவர்களையும் இன்புறுத்த வேண்டிப் பிரிவது ஏழைமையைக் காட்டாதென்க.

English Translation

Judging from what we see and what we hear of the things the bee-humming mountain-lord does these days, it is clear that the mountain-lifter Krishna has resolved to retreat into the tall gods-worshipped hills of Venkatam for making wealth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்