விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய்தெளிந்தார் என் செய்யார்*  வேறுஆனார் நீறுஆக* 
    கைதெளிந்து காட்டிக் களப்படுத்து*  பைதெளிந்த
    பாம்பின் அணையாய்*  அருளாய் அடியேற்கு* 
    வேம்பும் கறிஆகும்என்று. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியேற்கு - அடியேனுக்கு
அருளாய் - அருள்புரிய வேணும்
என்று - வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி - (பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
மெய் தெளிந்தார் - உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்

விளக்க உரை

அடியேன் சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள்செய்யவேணும், குற்றமே வடிவாகவுள்ளவர்களை இகழ்ந்தொழிய வேண்டுமேயன்றிக் கைக்கொள்வது தகாது என்று திருவுள்ளம் பற்றலாகாது, வேப்பிலை கைக்குமென்றாலும் இதைக் கறியாகச் சமைத்து உட்கொள்ள வேணுமென்னும் விரும்புடையார்க்கு அது கறியாகின்றதன்றோ, அப்படியே குற்றவாளரைக் கைக்கொள்வதே சீரியது என்று தெளிந்தவர்கள் என்போல்வாரை ஏன் அங்கீகரிக்கமாட்டார்கள்? அங்கீகரித்துத் தீருவர்கள். ஸ்வாமிந்! அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ அல்லது அவற்றில் திருக்கண் செலுத்தாமலோ அடியேனை விஷயீகரித்தருளவேணும் என்றாராயிற்று. வேறானார் – அடியவர்களான பாண்டவர்களோடு வேறுபட்ட துரியோதனாகியரைச் சொல்லுகிறது. ஆச்ரிதவிரோதிகளென்ற காரணத்தினால் எம்பெருமான்றனக்கே விரோதிகளென்க.

English Translation

O Lord reclining on a bright serpent! With a clear goal, you directed a war against the perverse hundred and burnt them to ashes. Pray grace this devotee self of yours. Even Neem can become food when properly cooked. How much more can be done with an enlightened mind!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்