விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தான் ஒருவன்ஆகி*  தரணி இடந்துஎடுத்து* 
    ஏன் ஒருவனாய்*  எயிற்றில் தாங்கியதும்*  யான் ஒருவன்
    இன்றா*  அறிகின்றேன் அல்லேன்*  இருநிலத்தைச்* 
    சென்றுஆங்கு அடிப்படுத்த சேய். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரு நிலத்தை - விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த - திருவடியினளவாக ஆக்கிக் டிகாண்ட (அளந்து கொண்ட)
சேய் - சிறுபிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய் - விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி - பூமியை

விளக்க உரை

எம்பெருமான் வாமநமூர்த்தியாகி மாவலிபக்கலிற் சென்று மூவடியிரந்துபெற்று மூவுலகளந்ததும், பிரளயப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அண்டபித்தியில் ஒட்டிக்கிடந்த பூமியை மஹாவராஹ மூர்த்தியாகி உத்தரித்தும் ஆகிய இப்படிப்பட்ட பெருமைகள் ஸர்வலோக ப்ரஸித்தமென்கிறார். “தானொருவனாகி“ என்பதை மேல் மூன்றாமடியோடு கூட்டியுரைக்க. ‘தானொருவனாகி இருநிலத்தைச் சென்றாங்கடிப்படுத்த சேய் ஏனொருவனாய்த் தரணி இடந்தெடுத்து எயிற்றில் தாங்கியதும் யானொருவன் இன்றாவறிகின்றேனல்லேன்‘ என இயையும். ‘யானொருவ னறிகின்றேனல்லேன்‘ என்கையாலே உலக மெல்லாமறியும் என்பதும், ‘இன்றா வறிகின்றேனல்லேன்‘ என்கையாலே இது புராதநம் என்பதும் வெளியாம்.

English Translation

I am not the only one to realise the lord today, He came as a manikin child and took the Earth. He came as a boar and lifted the Earth on his tusk tooth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்