விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவன் என்னைஆளி*  அரங்கத்து அரங்கில்* 
    அவன்என்னை எய்தாமல் காப்பான்*  அவன்என்னது
    உள்ளத்து*  நின்றான் இருந்தான் கிடக்குமே* 
    வெள்ளத்து அரவுஅணையின் மேல்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காப்பான் - காத்தருள்வன்,
அவன் - அப்பெருமான்
என்னது - என்னுடைய
உள்ளத்து - நெஞ்சிலே
நின்றான் இருந்தான் - நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,

விளக்க உரை

இப்படிப்பட்ட எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய ஸ்தாநங்களை விட்டிட்டு என்னெஞ்சிலேயே நிற்பதுமிருப்பதுமாகா நின்றான் என்கிறார். திருவரங்கம் பெரியகோயிலில், குடதிசை முடிவைத்துக் குணதிசை பாதம்நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கித் துயில்கொள்ளுமழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்ட பெருமாள் இனி நான் ஸம்ஸாரமாகிய நாடகசாலையிற் புகாவண்ணம் என்னைக் காத்தருள்வன், அவ்வளவேயன்றி என்னுடைய ஹ்ருதயத்தையே தனக்குப் பரமப்ராப்யமான ஸ்தலமாகத் திருவுள்ளம்பற்றி, நிற்பதும் வீற்றிருப்பதுமெல்லாம் இங்கேயாயிராநின்றான், இனி அவனுக்குத் திருப்பாற்கடலில் திருவரவணையில்தானும் படுக்கை பொருந்துமோ? பொருந்தாது – என்றாயிற்று. அரங்க என்னும் வடசொல் கூத்தாடுமிடம் என்னும் பொருளது, அதுவே தமிழில் “அரங்கு“ எனத் திரிந்தது. நாடகசாலையில் ஒவ்வொருவனே பலபல வேஷங்களைப் பூண்டு கொணடு வருதல்பேல இந்த ஸம்ஸாரத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் பலபல தேஹங்களைப் பரிக்ர ஹித்துக்கொண்டு அனேக யோனிகளில் பிறப்பதுபற்றி ஸம்ஸாரத்தை நாடகசாலையாகச் சொல்வது நன்கு பொருந்தும். 1. பிறவி மா மாயக்கூத்து“ என்றார் நம்மாழ்வாரும்.

English Translation

He is my master. He ensures my safety form the snares of life. He stand on my heart and he sits in my heart. So how can he prefer to life somewhere else in the deep-ocean?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்