விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சார்ந்துஅகடு தேய்ப்பத்*  தடாவிய கோட்டுஉச்சிவாய்* 
    ஊர்ந்துஇயங்கும் வெண்மதியின்*  ஒண்முயலைச்,* - சேர்ந்து
    சினவேங்கை பார்க்கும்*  திருமலையே,*  ஆயன்
    புனவேங்கை நாறும் பொருப்பு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தடாவிய - பரப்பையுடைத்தான
கோடு - சகரங்களினுடைய
உச்சி வாய் - உச்சயிலே
அகடு தேய்ப்ப - கீழ்வயிறு உராயும்படியாக
சார்ந்து - கிட்டி

விளக்க உரை

திருமலையை அநுபவிக்கிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற தென்பதை ஒரு அதிசயோக்தியினால் வெளியிடுகிறார் சந்திரனிடையே கறுப்பாகத் தோன்றுவதைக் கவிகள் பலவிதமாகக் கூறுவதுண்டு. மான் என்பர் சிலர், முயல் என்பர் சிலர் மற்றும் பல்வகையுங் கூறுவர். ‘முயல்‘ என்ற கொள்கையைப் பின்பற்றி இப்பாசுரமருளிச் செய்யப்படுகிறது. ஆகாசத்திலே திரிகின்ற சந்திரன் திருமலையின் சிகாநுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில் ஸம்பந்தப்பட்டுக் கொண்டே செல்லுகின்றன்னாம், அப்போது அவனது மடியிலிருக்கின்ற முயலைத் திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அதனைத் தான் உணவாகக் கொள்ளக்கருதி, பிடித்துக்கொள்ளவும் மாட்டாமல் விட்டுப் போகவும் மாட்டாமல் உறுத்துப் பார்த்தபடியே நிற்கின்றதாம். இப்படிப்பட்ட திருமலை வேங்கைமலர்களின் வாஸனை வீசப்பெற்றதாய்க் கண்ணபிரா னெழுந்தருளியிருக்குமிடமான திருமலையாம்.

English Translation

The strong mountain of venkatam rises with peaks that scrape the Moon and angry tigers pounce to catchthe hare on it, it is the abode of the cowherd Lord. The fragrance of wild vengai trees waft all over the mountain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்