விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய்மொழிந்து வாமனனாய்*  மாவலிபால்,*  மூவடிமண்
    நீஅளந்து கொண்ட நெடுமாலே,* - தாவியநின்
    எஞ்சா இணைஅடிக்கே*  ஏழ்பிறப்பும் ஆளாகி,* 
    அஞ்சாது இருக்க அருள். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாமனன் ஆய் - வாமநரூபியாகி
மாவலி பால் - மஹாபலியினிடத்தில் (சென்று)
வா மொழிந்து - (மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண் - மூவடிநிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட - அதை அளந்து கொண்ட

விளக்க உரை

உலகளந்த பெருமானே! உன் திருவடிகளில் எனக்கு நித்யகைங்கர்யத்தைத் தந்தருளி உன்னுடைய அனுபவத்துக்கு இடையூறான ஸம்ஸாரபயத்தையும் மாற்றியருளவேணு மென்கிறார். ‘நம்முடைய உடைமையை நாம் இழக்கலாகாது‘ என்கிற திருவுள்ளத்தினால் உலகங்களெயெல்லாம் அடிப்படுத்திக்கொண்டதுபோல உன்னுடைமையாகிய அடியேனையும் அடிப்படுத்திக்கொள்ளவேணு மென்கைக்காக இங்கு உலகளந்த சரிதையை எடுத்துக் கூறினரென்க. வாமநனுடைய மழலைச் சொற்களிலேயே மாவலி மதிமயங்கினனாதலால் அது தோன்ற ‘வாய்மொழிந்து‘ என்கிறார். இரண்டாமடியிலுள்ள ‘நீ‘ என்பது ஈற்றடியில் அந்வயிக்கக்கடவது. அஞ்சாதிருக்க – ‘நாளைக்கே‘ இந்த பகவத் கைங்கரியம் மாறிப்போய் ஸம்ஸார தாபத்ரயமே மேலிட்டு விடுமோ? என்று அஞ்சாதிருக்க.

English Translation

O! The good day when you came as a manikin, and begged Mabali for three strides of land, then measured the Earth! Grant that I may serve your feet through seven I cs and live without fear. O , Towering Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்