விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாமம் பலசொல்லி*  நாராயணாஎன்று,* 
    நாம் கையால் தொழுதும் நல்நெஞ்சே! வா*  மருவி 
    மண்ணுலகம் உண்டுஉமிழ்ந்த*  வண்டுஅறையும் தண்துழாய்,* 
    கண்ணனையே காண்க நம்கண். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நெஞ்சே - நல்ல மனமே!
நாராயணா என்று பல நாமம் சொல்லி - நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி
அம் கையால் - அழகியகையினாலே
நாம் தொழுதும் - நாம் தொழுவோம்
மருவி வா - இதற்கு நீயும் உடன்பட்டுவர

விளக்க உரை

இந்திரியங்களெல்லாவற்றாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணு மென்கிறார். நாராயணாதி ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லுவதிலே வாய் ஊன்றியிருக்கவேணும், கைகள் அஞ்சலி பண்ணுவதிலே அவகாஹித்திருக்கவேணும், கண்கள் அப்பெருமானையே ஸேவீத்துக் கொண்டிருக்கவேணும். மனத்தின் துணையின்றி ஒரு இந்திரியமும் ஒரு காரியமும் செய்யமாட்டாதாகையாலே இவையித்தனைக்கும் நெஞ்சு உடன்பட்டிருக்கவேணும் என்றதாயிற்று. “வண்டறையுந் தண்டுழாய்க்கண்ணனை“ என்றதனால் – தோளிணைமேலும் நன் மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் மதுவைப்பருகி ரீங்காரம் செய்கின்ற வண்டுகளின் ஒலியே செவிக்கு விஷயமாகவேணுமென்பதும் அந்த திருத்துழாயின் பரிமளமே மூக்குக்கு விஷயமாகவேணு மென்பதும் தொனிக்குமென்றுணர்க. “ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும்“ என்ற முகுந்தமாலை ச்லோகம் இங்கு ஸமரக்கத்தகும்.

English Translation

Come, O Heart! Let us praise him with love, reciting "Narayana" and his many names, Let us fold our hands in worship. The bee-humming Tulasi-garland Lord Kirshna, swallowed and remade the Earth. Let our eyes see and enjoy his form.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்