விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மனத்துஉள்ளான்*  மாகடல் நீர்உள்ளான்,*  மலராள்
    தனத்துஉள்ளான்*  தண்துழாய் மார்பன்,* - சினத்துச்
    செருநர்உகச் செற்றுஉகந்த*  தேங்குஓத வண்ணன்,* 
    வருநரகம் தீர்க்கும் மருந்து  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செருநர் - சத்துருக்கனானவர்கள்
உக - அழியும்படி
சினத்து - சீற்றத்தினாலே
செற்று - த்வம்ஸம்பண்ணி
உகந்த - மகிழ்ந்தவனும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானளவிலே பொருந்தினபடியைப் பேசினார், இப்பாட்டில், அப்பெருமான்தானே தம்முடைய மனத்தில்வந்து பொருந்தினமையைப் பேசுகிறார். இப்பாட்டில், மனத்துள்ளான் என்பது வினைமுற்றாக நிற்கக்கடவது. மாகடல் நீரிலும் மலராள் தனத்திலுமிருந்தவன் அவ்விடங்களை விட்டிட்டு என்மனத்திலே வந்து புகுந்தானென்கிறார். ஆச்ரிதரக்ஷணத்திற்காகத் திருப்பாற்கடலிலே கிடந்து அவ்விடம்போலே பெரியபிராட்டியார் திருமுலைத்தடத்தையும் ஒரு ஸ்தானமாகவுடையனாய், அவள் மேல்விழுந்து அநுபவிக்கும்படியாகக் குளிர்ந்த திருத்துழாயாலே அலங்க்ருதமான திருமார்பையுடையனாய், ஆச்ரிதர்களுக்கு விரோதிகளாயுள்ளவர்கள் உருவழிந்து ஒழியும்படியாகச் சீறி அவர்களைத் தொலைத்து ‘ஆச்ரிதவிரோதிகள் தொலையப் பெற்றோம்‘ என்று திருவுள்ளமுவந்தவனாய், அந்த உவப்பினால் புகர்பெற்று விளங்குகின்ற வடிவையுடையனாய், அநுபவித்தே தீறவேண்டும்படியான ஸம்ஸாரநரகத்தைக் கடப்பதற்கு அருமருந்தானவன் என்னுடைய நெஞ்சிலேயுள்ளான் என்றாராயிற்று. மற்ற விசேஷணங்களைப்போலே மனத்துள்ளான் என்பதையும் ஒரு விசேஷணமாக்கி, இப்படிப்பட்ட எம்பெருமான் வருநரகம் தீர்க்கும் மருந்தாயிருப்பன் என்று முடிக்கவுங் கூடுமாயினும் மனத்துள்ளானென முடிப்பதே நன்று பொருந்தும். செருநர் – பகைவர். ‘சினத்து‘ என்பதை செருநர்க்கு விசேஷணமாக்கவுமாம், கோபத்தையுடைய பகைவர் என்றவாறு.

English Translation

Destroying the angry Asuras with delight, the Lord resides in my heart like a medicine for the ills of karmic hell. He is the ocean-hued Lord residing in the ocean, the Tulasi garland Lord residing in the heart of the lotus-dame.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்