விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மதிக் கண்டாய் நெஞ்சே!*  மணிவண்ணன் பாதம்,* 
    மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை,*  - மதிக் கண்டாய்- 
    பேர் ஆழிநின்று*  பெயர்ந்து கடல் கடைந்த*
    நீர் ஆழி வண்ணன் நிறம்.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே – மனமே!
மணி வண்ணன் பாதம் – நீலமணிவண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய் – அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து – பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த – தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக்கடலைக் கடைந்த

விளக்க உரை

இப்பாட்டில் ‘நெஞ்சே!‘ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும். நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கையும், வாக்குக்கு அடுதத்தான உடலையும் விளிப்பதாகவுங் கொள்ளவேணும் “யத் மநஸா த்யாயதி தத் வரிசா வததி தத் கர்மணா கரோதி“ என்று வேதமுரைத்த கட்டளையிலே மன்மொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்மூன்று கரணங்களுக்கும் காரியம் விதிக் கிறாரிப்பாட்டில். ‘மதிக்கண்டாய்‘ என்பதே மூன்றிடத்தும் க்ரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள் வாசி கொள்ளவேணும் மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய் வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக்கொண்டிருக்கக்கடவாய், தலையே! மணிவண்ணன் திருவடிகளையே நீ அணிந்துகொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழகியதாம்.

English Translation

Always remember the Gem-Hued Lord's feet, O Heart! Always remember his names as well, Always remember the hue of the Lord who churned the ocean, -the ocean's dark hue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்