விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பதி அமைந்து நாடி*  பருத்து எழுந்த சிந்தை,* 
    மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி*  - கதி மிகுத்து அம்-
    கோல் தேடி ஓடும்*  கொழுந்ததே போன்றதே,* 
    மால் தேடி ஓடும் மனம்.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பதி - திருமலைத் திருப்பதியிலே
அமைந்து - வேரூன்றி நின்று
நாடி - எங்கேயென்று தேடிக்கொண்டு
பருத்து எழுந்த சிந்தை - மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய்
மதி உரிஞ்சி - சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு

விளக்க உரை

கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில். முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும் எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கேயெங்கேயென்று திருமாலைத் தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரகத்தையுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது - என்றாராயிற்று.

English Translation

The heart that longs for the Lord and dwells on his form in vekatam grows like a creeper that seeeks the support of well grown trees, and quickly climbs to touch the moon in the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்