விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொடர் எடுத்த மால் யானை*  சூழ் கயம் புக்கு அஞ்சி* 
    படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று,*  இடர் அடுக்க- 
    ஆழியான்*  பாதம் பணிந்து அன்றே,*  வானவர் கோன்-
    பாழி தான் எய்திற்று பண்டு? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழியான் பாதம் - (முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான் - அந்த கஜேந்திரம்
பண்டு - முற்காலத்தில்
வானவர் கோன்பாழி - தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று - அடைந்தது.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “பருவஞ்செழுங்கதிரோ னொண்மலரோன் கண்ணுதலோனன்றே தொழுந் தகையார் நாளுந்தொடர்ந்து” என்றருளிச் செய்ததில் அப்படிப்பட்ட உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால் எம்பெருமானை ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை; பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்.

English Translation

The worshipful elephant in the yore entered the lotus take and trembled with fear, then raised his trunk with flowers and offered worship. Then and there, did he not reach the Lord's abode?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்