விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புரிஒருகை பற்றி*  ஓர் பொன்ஆழி ஏந்தி,*
    அரிஉருவும் ஆள்உருவும்ஆகி,* - எரிஉருவ-
    வண்ணத்தான் மார்புஇடந்த*  மால்அடியை அல்லால்,*  மற்று- 
    எண்ணத்தான் ஆமோ இமை?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இடந்த - நகத்தால் குத்திப்பிளந்து போட்ட
மால் - திருமாலினுடைய
அடியை அல்லால் - திருவடிகளைத்தவிர
மற்று - வேறொரு விஷயத்தை
இமை - க்ஷணகாலமேனும்

விளக்க உரை

அடியவர்கள் திறத்தில் எம்பெருமானுக்குண்டான பாரதந்திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அநுஸந்தித்தால் அப்பெருமானைத் தவிர்த்து வேறொருவிஷயத்தை ஒரு நொடிப்பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்னவேண்டி, அப்பெருமான் பரமபக்தனாகிய ப்ரஹ்லாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலையெடுத்துப் பேசுகிறார். புரியொருகைபற்றி = ‘வலம்புரி ‘ என்னும் பதத்தில் ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை மாத்திரம் இங்குப் பிரயோகித்திருப்பது நாமைகதேசத்தைகொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க: ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல. எம்பெருமானுடைய அவதாரங்களெல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே “புரியொருகைபற்றியோர் பொன்னாழியேந்தி” எனப்பட்டது. இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணார்த்தமாகவாம் . அசுரர்களுடைய உடல் நெருப்புநிறமா யிருக்குமாதலால் எரியுருவ வண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக் கூறினர். பாசுரத்தினிறுதியுலுள்ள இமை என்பதை வினைமுற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை: நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க.

English Translation

The lovable Lord who bears a conch in one hand and a discus in the other, came as half-man-half-lion and destroyed the fierce Asura Hiranya's mighty chest. Other than his feet, Is there anything to contemplate, worth the while?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்