- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதைசெய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்
காணொளி
பதவுரை
கள்ளம் - வஞ்சனையுடைய
சகடும் - சகடாஸுரனையும்
மருதும் - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய - (வடிவம்) கட்டுக்குலைந்தழியும்படி
உதை செய்த - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
விளக்க உரை
‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.
English Translation
O Lord residing in bright and beautiful Vellarai! O Child-king who destroyed the cart and the twin Arjuna trees! After you drank the milk from the ogress Putana’s breast, I cannot understand things as they really are. It is bed time now. Come, let me ward off the evil eye.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்