விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*
    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கையும் திருக்கைகளையும்;
காலும் திருவடிகளையும்;
நிமிர்த்து (நீட்டி) நிமிர்த்து;
கடாரம் கடாரத்தில் (காய்ச்சின);
நீர் திருமஞ்சனத் தீர்த்தத்திலே;

விளக்க உரை

உரை:1

கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

உரை:2

யசோதைப்பிராட்டி ஒருநாள் ஸ்ரீக்ருஷ்ணசிசுவைக் குளிப்பாட்டும்போது வழக்கப்படியே குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாஸநாத்ரவ்யங்களைச் சேர்த்துக் காய்ச்சின தீர்த்தத்தைக் கொண்டு குளிப்பாட்டி, முடிவில் மஞ்சள் தேய்வைக் கொண்டு நாக்கு வழிக்குமளவில் அந்தக் குழந்தை வாயைத் திறக்க, அந்த வாயிலே ஸகல லோகங்களையுங் கண்டாள். அர்ஜுநனுக்கு திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்துத் தன்னுடைய விச்வரூபத்தைக் காட்டினாப்போலே யசோதைக்கும் தன்னுடைய ஸ்வந்தரமான இச்சையினாலே இப்படி காட்டியருளினனென்க.

English Translation

She washed her child in a bathtub gently stretching his arms and legs. Then she opened his mouth and clean the tongue with a piece of tender turmeric, and saw the seven worlds in his gaping mouth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்