- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள். நெய்யாடலாவது - ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்; எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம். ‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு - மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற (வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் - இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.
English Translation
Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fibre; they smeared themselves with Ghee and danced.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்