விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
    ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*
    பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
    கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து - நான்முகனாகிய ஒருவனை திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவனும்
ஒருவனை - ருத்ரனாகிய ஒருவனை
ஆகம் தன்னால் - (தனது) திருமார்பிலுண்டான ஸ்வேதஜலத்தாலே
சாபம் நீக்கி - (அவனுடைய பிரமஹத்தி சாபத்தைத் தொலைத்து
உம்பர் ஆள் - (நீ முன் போலவே) மேலுலகங்களை ஆளக்கடவாய்

விளக்க உரை

ஆகந்தன்னால் = ‘ஆகம்’ என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர்; இங்கு இலங்கணையால் மார்விலுண்டான நீரைச்சொல்லுகிறது. மார்வில் நிரையெடுத்துப் பிச்சையிட்டு சாபந்தீர்த்தனனென்க. “என் எந்தாய்! சாபந்தீரென்ன இலங்கமுதநீர் திருமார்பில் தந்தான்” என்றா இவர்தாமே கீழ்; “ஈனமர்சாபம் நீக்காயென்ன வொண்புனலை யீந்தான் எனபர்மேல். திருச்சந்த விருத்தத்தில் “கீறுதிங்கள் வைத்தனன் கைவைத்தவன் கபாலமிசை, ஊறுசெங்குருதியால் நிறைத்த” என்றதனால், திருமார்வைக்கீறி ரத்தத்தையெடுத்தும் பிச்சையிட்டதாகவும் உண்டு. அரவணைமேல் கருவரைவண்ணன் = ஒரு வெள்ளிமலையின்மேல் அஞ்சனகிரி சாய்ந்தாற்போன்ற பரபாக அழகு காண்க.

English Translation

The Lord who swallowed the seven oceans, the hills, the sky, the Earth and all else, then brought them out again, is my father. He resides and mansions that touch the moon, In fragrant bowered ten-Tiruper. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்