விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
    மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*
    நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
    எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் தண் ஆலி மாலே - அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!,
சோலை மழகளிறே - சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே!
நந்தா விளக்கின் சுடரே - ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே!
நறையூர் நின்ற நம்பீ - திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே!
இந்தளுராய் என் எந்தாய் - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே!

விளக்க உரை

கீழ்ப்பாசுரம் மிக்க தீநஸ்வரத்தோடே பேசியிருக்கச் செய்தேயும் இந்த;ரெம்பிரான் திருவுள்ளமிரங்கக் கண்டிலர்; பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலையடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார். சோலைமழகளிறே! – சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக்கன்றுபோலே இனியனா யிருப்பவனே!. திருமாலிருஞ் சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்றுமுரைக்கலாம். நந்தாவிளக்கின் சுடரே! – விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கு இன்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஜ்ஞாநஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! என்கை. இறையும் இரங்காய் - சிறிதேனும் இரங்கவேணும் என்றும் பொருளாம்.

English Translation

O Lord of indolur! O Precious one remaining in my heart! O Prince sweet to approach! O Lord-adorable of Tiruvalil O Elephant roaming in Tirumalirumsolai! O Lamp-eternal of Manimadakkoyil! O Lord standing in Naraiyur! My own sweet Lord! See, you have no pity for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்