விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உருமின் - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய்
மறை உடை - எதிர்த்து வருகையை யுடையவைகளான
மால் விடை ஏழ் - பெரிய ஏழு ரிஷபங்களை
செருவில் - போர்க்களத்தில்
அடர்த்தாற்கு - வலியடக்கின பெருமானுக்கு
இடம் - இருப்பிடமாவது

விளக்க உரை

நப்பின்னையை அடைய விரும்பிய பெருமான் ஏழுகாளைகளை நெற்றியை உடையவளாதலால் பெருமான் அவளை அடைய விரும்பினான்.

English Translation

For the sake of the moon-faced Nappinnai, the Lord fought seven strong bulls. He resides in beautiful Kanchi surrounded by water tanks. Our Pallava king has war-drums that roll like the roaring seas, dispatching enemy kings to the sharp edge of his mighty sword. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்