விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
    புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 
    குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
    இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புலம் கெழு - மநோஹரமான
பொரு நீர் - அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய
புட்குழி - திருப்புட்புழி விஷயமாக
பாடும் - பாட்டுகள் பாடாநின்றாள்;
நீர்மலைக்கு போதுமோ என்னும் - திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்;

விளக்க உரை

ஆம்பல் என்ற சொல் பலபொருள்களுடையது; இங்கு இசைச் சூழலென்னும் பொருளது. குழலூதுபவன் கண்ணபிரானாயிருக்க, அலங்கெழுதடக்கையாயன் என்று ஹலாயு தனான பலராமனைச் சொல்லிற்றென்னென்னில்; 1. “ மீனோடாமை கேழலரிகுறளாய் முன்னு மிராமனாய்த்தானாய்ப், பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்ற ஒற்றுமை நயம்தோற்றச் சொன்னபடி 2 “ அலம்புரிதடக்கையாயனே !” என்றார் கீழும்; 3. “அலமுமாழிப் படையுமுடையான்” என்பர் மேலும். குலங்கெழுகொல்லிக் கோமளவல்லி ஸ்ரீ ‘கொல்லி’ என்பதற்கே இலக்கனையால் கொல்லிமலையிலுள்ள பாவைபோன்றவள் என்று பொருள் கொள்ளலாம்; அன்றி, கொல்லி, சொல்லிமலையிலுள்ள, கோமளவல்லி--அழகிய கொடிபோன்ற பாவையையொத்தவள் என்றும் உரைக்கலாம், (கொல்லிப் பாவையைப்பற்றின விவரணம்; இத்திருப்பதிகத்தின் முதற்பாட்டினுரை யிற் காணத்தக்கது.)

English Translation

“My heart breaks to hear the flute on the lips of Lotus-Lord, -- he has four arms strong like the plough bull”, -- she sings for the Resident of Putkuli watered by cool and fragrant water resources. “Let us got to Neermalai” says my life-like daughter. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்