விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
    வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
    மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
    என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் குடிக்கு தக்க ஆ - தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை
ஏதும் நினையாள் - சிறிதும் ஆராய்கின்றிலள்;
தட கடல் - பெரிய கடலோடும்
நுடங்கு எயில் - வளைந்த மதிளோடும் கூடின
இலங்கை - இலங்கையிலிருந்த

விளக்க உரை

இப்பெண்பிள்ளை ப்ரபந்நகுல மரியாதைக்குத் தகுந்தபடி வர்த்திக்கப் பார்க்கிறாளில்லை; சேஷபூதர் சேஷியினிடத்திலே பாரத்தை வைத்தபின்பு “களைவாய்துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே அவன் செய்தபடி செய்துகொள்க வென்று ஆறியிருப்பதே ப்ரபந்நகுல மரியாதையாகும்; இவள் அப்படி ஆறியிராமல் பதறுகின்றாளாகை யாலே தன்குடிக்கேதும் தக்கவா நினையாள்.

English Translation

She doesn’t think a good thought befitting her family, she knows only to hear and lose herself in the story of the war fought to destroy the high walled ocean-girdled Lanka’s clan. My girl with a lightning thin waist has shrunken, her lighted twin breasts have paled, O! Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்