விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 
    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புலன் கொள் - இந்திரியங்களைக் கவர்கின்ற (மநோஹரமான)
நிதி குவையோடு - பொற்குவியல்களையும்
புழை கை மா களிறு இனமும் - துதிக்கையையுடைய பெரிய யானைக் கூட்டங்களையும்
நலம் கொள் நவமணி குவையும் - நல்ல நவரத்னக் குவியல்களையும்
சுமந்து - தாங்கிக்கொண்டு

விளக்க உரை

திருக்கடல்மல்லை கடற்கரையிலே உள்ளதாகையாலும், அக்கடலில் த்வீபாந்தரங்களிலிருந்து சிறந்த வஸ்துக்களை ஏற்றிக்கொண்டுவரும் கப்பல்கள் பெரும்பான்மையாகக் காணப்படுதலாலும் இந்த நிலைமையைப் பேசுகிறார் இப்பாசுரத்தில். நிதி என்னும் பல பொருளொருசொல் இங்கு, பொன் என்ற பொருளில் வந்தது. சிறந்த பொற்குவியல்களையும் யானைக் கூட்டங்களையும் நவமணித்திரள்களையும் அளவு மீறித் தாங்கிக் கொண்டு வருகையாலே பாரம் கனத்துத் துவண்டிரா நின்றனவாம் மரக்கலங்கள். அப்படிப்பட்ட நற்சரக்குக்களமைந்த பல கப்பல்கள் உலாவப்பெற்ற கடலின் கரையிலேயுள்ள மல்லாபுரியை வழிபட நினைக்கும் பாகவதர்களையே அடியேன் வழிபடக்கடவேன் என்றாராயிற்று. “நான்றொசிந்த” என்ற பாடமும் பொருந்தும். நான்று = ‘நால்’ என்னும் வினையடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்; தொங்கலாடி என்றபடி. ஒசிதல்-தளர்தல். ஏறின சரக்கின் கனத்தாலுண்டான நிலையைச் சொன்னபடி. கலம் = மரக்கலம்; அதாவது-கப்பல்.

English Translation

Heavy boats carrying eye-catching heaps of gold, and elephant-loads of gems, cruise the shores of Kadal Mallai where our Talasayanam Lord resides. O Heart, worship those who offer worship here!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்