விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*
    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவரை அமுது ஊட்டும் பெருமானார் - தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும்,
மருவ இனிய - பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான
தண் ஆர்ந்த - குளிர்ந்திநிரம்பிய
கடல்மல்லை தலசயனத்து - திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில்
உறைவாரை - நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை

விளக்க உரை

திருக்கடல்மல்லைத் தலசயனத்துறைவாரைச் சிந்தை செய்யாதவர்கள் பதார்த்தகோடியிலேயே சேராதவாகளாகையால் அபதார்த்தங்களான அவர்களை நான் ஒரு பொருளாகவே மதிக்கமாட்டேனென்கிறார். தலசயனத்துறைவாரைச் சிந்திக்கும் மஹான்களையே நான் அநவரதம் சிந்திப்பேன் என்பது தேறும். நண்ணாத = பகவத்விஷயத்தில் பகையை இயற்கையாகவுடைய என்றபடி. ஸாதுக்களைக் கண்டவுடனே கொல்வற்காக வாட்படையைக் கையோடே வைத்துக்கொண்டிருப்பவர்களாதலால் “வாளவுணர்” என்றார்;.

English Translation

Going between the unrelenting Asuras dressed as a female, the lord gave ambrosia to the gods. He resides in cool, fragrant kadal Mallai as Talasayanam, a form reclining on the ground. We shall not regard those who do not even for a moment think of him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்