விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எந்நாள் எம்பெருமான்*  உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
    அந்நாளே*  அடியோங்கள் அடிக்குடில்*  வீடுபெற்று உய்ந்தது காண்* 
    செந்நாள் தோற்றித்*  திரு மதுரையிற் சிலை குனித்து*  ஐந்தலைய 
    பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே*  உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்பெருமான் - ஸ்வாமிந்;
உன்தனக்கு - தேவரீர்க்கு;
அடியோம் என்று - நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று;
எழுத்து - சொல்லானது;
பட்ட நாள் - எங்களுடைய வாயில் உண்டாகப்பெற்றநாள்;

விளக்க உரை

கைவல்யார்த்திகள் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதாக அமைந்த பாசுரம் ஆகும். சுவாமி தேவரீருக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று அறிந்து கொண்டோமோ, அந்த தினம் முதல் அடியோங்களுடைய சந்தானமெல்லாம் உஜ்ஜீவித்துவிட்டது. நல்ல திருநாளிலே அவதாரம் பண்ணி, கம்சனுடைய யாக சாலையில் புகுந்து வில்லை வளைத்து முறித்து, காளிய நாகத்தின் தலைமேல் குதித்த தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வோம்.

English Translation

My Lord! The day we became your bonded serfs, that very day our entire clan found its refuge and salvation, see! You appeared on that auspicious day in Mathura city, destroyed Kamsa’s arsenal and danced on the head of the five hooded snake, Pallandu to you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்