பிரபந்த தனியன்கள்
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.
பாசுரங்கள்
தலைப்பெய்து யான் உன்* திருவடி சூடும் தகைமையினால் ,*
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,* மாயம் செவ்வே-
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
தொலைப் பெய்த நேமி எந்தாய்,* தொல்லை ஊழி சுருங்கலதே.
சுருங்கு உறி வெண்ணெய்* தொடு உண்ட கள்வனை,* வையம் முற்றும்
ஒருங்குற உண்ட* பெரு வயிற்றாளனை,* மாவலிமாட்டு-
இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
பெருங் கிறியானை அல்லால்,* அடியேன் நெஞ்சம் பேணலதே.
பேண் நலம் இல்லா அரக்கர்* முந்நீர பெரும் பதிவாய்,*
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,* நின்னை விண்ணோர்-
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
காணலும் ஆம்கொல் என்றே,* வைகல் மாலையும் காலையுமே.
காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த* கங்குல் குறும்பர்*
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,* அன்ன கண்டும்-
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து*
மாலை நல் நாவில் கொள்ளார்,* நினையார் அவன் மைப் படியே.
மைப் படி மேனியும்* செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,*
எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
அப்படி யானும் சொன்னேன்* அடியேன் மற்று யாது என்பனே.?
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,* அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்*
மூது ஆவியில் தடுமாறும்* உயிர் முன்னமே,* அதனால்-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
மாதாவினை பிதுவை,* திருமாலை வணங்குவனே. (2)
வணங்கும் துறைகள்* பல பல ஆக்கி,* மதி விகற்பால்-
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,* அவை அவைதோறு-
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்*
இணங்கும் நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே
எழுவதும் மீண்டே* படுவதும் பட்டு,* எனை ஊழிகள் போய்க்-
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,* இமையோர்கள் குழாம்-
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு*
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,* உண்டோ கண்கள் துஞ்சுதலே?
துஞ்சா முனிவரும்* அல்லாதவரும் தொடர நின்ற,*
எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,* இமையோர் தமக்கும்-
தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
நெஞ்சால் நினைப்பு அரிதால்,* வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.
ஈனச் சொல் ஆயினும் ஆக,* எறி திரை வையம் முற்றும்*
ஏனத்து உருவாய் இடந்த பிரான்,* இருங் கற்பகம் சேர்-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
ஞானப் பிரானை அல்லால் இல்லை* நான் கண்ட நல்லதுவே (2)
நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப் பேர்-
வல்லார்* அடிக் கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை* மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)