பிரபந்த தனியன்கள்

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

   பாசுரங்கள்


    சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
    தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த

    வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
    தேன்அமரும் பூமேல் திரு.  (2)