பிரபந்த தனியன்கள்
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.
பாசுரங்கள்
சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,* தண்துழாய்த்
தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த
வான்அமரும் மின்இமைக்கும்* வண்தாமரைநெடுங்கண்,*
தேன்அமரும் பூமேல் திரு. (2)