பிரபந்த தனியன்கள்

முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

   பாசுரங்கள்


    சீரார் திருமார்பின் மேல்கட்டி*--செங்குருதி
    சோராக் கிடந்தானைக் குங்குமத்தோள் கொட்டி*

    ஆரா எழுந்தான் அரிஉருவாய்* அன்றியும்



    பேர் வாமன்ஆகிய காலத்து*  மூவடிமண்
    தாராய் எனக்குஎன்று வேண்டி சலத்தினால்*

    நீர்ஏற்று உலகுஎல்லாம் நின்றுஅளந்தான் மாவலியை*



    ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்*
    கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக*

    பேராமல் தாங்கிக் கடைந்தான்*--திருத்துழாய்த்



    தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும்*
    போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றுஅலறி*
    நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடுங்கையால்*

    நாராயணாஓ மணிவண்ணா நாகணையாய்* 
    வாராய் என்ஆர்இடரை நீக்காய்*--எனவெகுண்டு


    தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறுஆக*
    ஈரா அதனை இடர்கடிந்தான் எம்பெருமான்*

    பேர்ஆயிரம்உடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத்*
    தீரா நோய் செய்தான் எனஉரைத்தாள்*--சிக்கெனமற்று


    ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்*
    போர்ஆர் வேல்கண்ணீர் அவன்ஆகில் பூந்துழாய்*

    தாராது ஒழியுமே தன்அடிச்சி அல்லளே*--மற்று 
    ஆரானும்அல்லனே என்றுஒழிந்தாள்*--நான் அவனைக்


    காரார் திருமேனி கண்டதுவே காரணமா*

    பேராபிதற்றா திரிதருவன்*--பின்னையும் 



    ஈராப் புகுதலும் இவ்உடலைத் தண்வாடை*

    சோராமறுக்கும் வகைஅறியேன்*--சூழ்குழலார்



    ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை*
    வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்*

    வாராய் மட நெஞ்சே வந்து*-- மணிவண்ணன்



    சீரார் திருத்துழாய் மாலை நமக்கு அருளி* 
    தாரான் தரும்என்று இரண்டத்தில் ஒன்றுஅதனை* 
    ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்* 
    ஆராயுமேலும் பணிகேட்டு அதுஅன்றுஎனிலும்*

    போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு* 
    காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்*
    வாராதே என்னை மறந்ததுதான்*--வல்வினையேன்


    ஊரார் உகப்பதே ஆயினேன்* -- மற்றுஎனக்கு இங்கு




    ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்* 

    நீராய் உருகும் என்ஆவி*--நெடுங்கண்கள் 



    ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*--உத்தமன்தன்

    பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்



    கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார்*
    ஆரேபொல்லாமை அறிவார்? அதுநிற்க* 
    ஆரானும்ஆதானும் அல்லள்அவள் காணீர்*

    வார்ஆர் வனமுலை வாசவதத்தை என்று*
    ஆரானும் சொல்லப்படுவாள்*-- வளும்தன்


    ஆரானுமாதானும் அல்லலவள் காணீர்* 
    வாரார் வனமுலை வாசமததை வென்று*

    ஆரானும் சொல்லப்படுவாள்* – அவளும்தன்



    பேர்ஆயம்எல்லாம் ஒழிய பெருந்தெருவே*
    தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*

    ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*--மற்றுஎனக்கு இங்கு



    ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
    காரார் திருமேனி காணும் அளவும்போய் 
    சீரார் திருவேங்கடமே திருக்கோவ 
    லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே

    பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே 
    பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் 
    ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை  (2)


    காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்* 
    சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்* 
    காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*

    ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை* 
    சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்* 


    பாரோர் புகழும் வதரி வடமதுரை* 
    ஊராயஎல்லாம் ஒழியாமே நான் அவனை*
    ஓரானை கொம்புஒசித்து ஓர்ஆனை கோள்விடுத்த-

    சீரானை செங்கண் நெடியானை தேன்துழாய்த்-
    தாரானை தாமரைபோல் கண்ணானை* எண்அருஞ்சீர்


    எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி*--பெருந்தெருவே




    ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*

    வாரார் பூம் பெண்ணை மடல்